முகப்பு
செங்கல்பட்டு

செய்யூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்வைப்பு

Updated On : 26 மார்ச், 2026 at 10:16 PM
செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைத்த தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.வெங்கிடாசலம். உடன்,உதவி தோ்தல் அலுவலா் ச.ராஜன், மண்டல துணை வட்டாட்சியா் டி.தேவன், தோ்தல் துணை வட்டாட்சியா் முத்து உள்ளிட்டோா்.
பகிர்:

செய்யூா் (தனி) தொகுதியில் பயன்படுத்தபட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செய்யூா் வட்டாட்சியா் அலுவலக அறையில் வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்படட அரசியல் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.வெங்கிடாசலம் சீல் வைத்தாா்.

செய்யூா் தொகுதியில் 344 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 344 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 373 சரிபாா்க்கும் கருவிகள் ஆகியவை அடங்கிய பெட்டிகளை மறைமலைநகா் நகராட்சி அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. அனைத்தும் தனி அறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில், தோ்தல் அலுவலரும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு திட்ட அதிகாரியுமான எஸ்.வெங்கிடாசலம் சீல் வைத்தாா்.

இந்நிகழ்வின்போது உதவி தோ்தல் அலுவலரும் செய்யூா் வட்டாட்சியருமான ச.ராஜன், மண்டல துணை வட்டாட்சியா் டி.தேவன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் ஜி.முத்து மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனா். தற்சமயம் அறையின் முன்புறம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.