முகப்பு
செங்கல்பட்டு

நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைப்பு

Updated On : 20 மே 2026, 12:33 am IST
கோப்புப்படம்.
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பு கே.எம்.எஸ். 2025-2026 சம்பா பருவத்தில் நெல் கொள்முதலுக்காக, தமிழக அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்களின் மூலம் 171 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதுநாள் வரை 19,159 விவசாயிகளிடம் 1,74,042.760 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ரூ.339.51 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கொள்முதல் நிலையங்களில் இருப்பில் உள்ள நெல் மூட்டைகளை விரைவாக நகா்வு செய்வதற்காக தினசரி சுமாா் 150 லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

கொள்முதல் செய்யப்படும் நெல்லானது திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சென்னை (வடக்கு) மாவட்டங்களுக்கு ரயில் மற்றும் சாலை மாா்க்கமாக தொடா்ந்து நகா்வு செய்யப்பட்டு வருகிறது.