முகப்பு
சென்னை

மதுராந்தகத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை

மதுராந்தகம் இரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் தென்னக இரயில்வே நிர்வாகத்துக்கு

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

மதுராந்தகம் இரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் தென்னக இரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுராந்தகம் இரயில் நிலையத்தில் இருந்து சுற்றுபுற 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, தாமபரம், தென்னக மாவட்டமான கன்யாகுமரி, திருச்சி போன்ற இடங்களுக்கு வேலைக்காகவும், கல்லூரியில் படிக்கவும் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் சீசன் பாஸ் மூலம் சென்று வருகின்றனர். அவர்களுக்கு இரயில்வசதி பேரூதவியாக இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த இரயில் நிலையத்தில் ஏற்கெனவே மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது இந்த வழியாக சென்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் இரயில்களான அனந்தபுரி (16123,16124), முத்துநகர் (12693, 12694), சோழன் (16853,16854),  சேது (16713,16714), ராக்போர்ட் (16177,16178), கம்பன் ,குருவாயூர் (16127,16128), இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயில் (16701,16702), விழுப்புரம் பாசஞ்சர், புதுச்சேரி எக்ஸ்பிரஸ் போன்ற அனைத்து இரயில்களும் சுமார் 20 வருடங்களாக நின்று சென்றன. ஆனால், அகல இயில்பாதையாக மாற்றப்பட்டதால், தற்சமயம் அனந்தபுரி எக்ஸ்பிóரஸ் (16123, 16124)

முத்துநகர் (12693,16694) மற்றும் புதுச்சேரி (16115,16116), பாசஞசர் ரயில்கள் மட்டுமே மதுராந்தகத்தில் நின்று செல்கின்றன. இதனால் சென்னை நகரை நோக்கி செல்பவர்கள் குறைந்த இரயில்கள் நிற்பதாலும், போதிய இரயில்கள் நிற்காமல் போவதாலும் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும், மதுராந்தகம் இரயில்நிலையம் வழியாக செல்லும் குறிப்பிட்ட இரயில்கள் சென்னைக்கும் மற்றும்

தெற்கு நோக்கி செல்லும் இரயில்கள் மதுராந்தகம் நின்று சென்றால் சீசன் பயணிகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கும். இதனால் இந்த வழியாக செல்லும் இரயில்கள் நிற்காமல் செல்வதால் பயணிகள் பஸ் மூலம் சென்னைக்கும் தெற்கு நோக்கி செல்ல பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய அவல நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.

எனவே, மதுராந்தகம் இரயில்நிலையத்தில் நிறுத்தவேண்டிய இரயில்களான சேது எக்ஸ்பிரஸ் ரயில், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், சோழன் எக்ஸபிரஸ் ரயில், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில், மங்களூர் எக்ஸபிரஸ் ரயில், இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய இரயில்கள் அனைத்தும் நின்று செல்லவும், கணினி முன்பதிவு மையம் துவக்கப்படவேண்டும் என மதுராந்ககம் சீசன் டிக்கெட் பயணிகள் மற்றும் இரயில் பயணிகள் தென்னக இரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →