சென்னை

ஆளில்லாத வீட்டில் 60 பவுன் நகை திருட்டு

DIN

சென்னை அருகே ஆளில்லாத வீட்டில் 60 பவுன் தங்கநகை திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
நீலாங்கரை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் 18 -ஆவது தெருவைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி சுமதி (43),
வியாழக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு, திருவான்மியூரில் வசிக்கும் தனது தாயார் சகுந்தலாவை பார்க்கச் சென்றார். அங்கிருந்து சுமதி, வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகை திருடப்பட்டிருப்பதை அறிந்து சுமதி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சுமதி, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT