சென்னை

ஓட்டுநரை தாக்கி கார் கடத்தல்

DIN

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஓட்டுநரைத் தாக்கிவிட்டு ரூ.2 ஆயிரத்துடன் காரை கடத்திச்சென்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி பி.வி. காலனியைச் சேர்ந்தவர் சாகுல்அமீது (31). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள மென்பொருள் நிறுவனத்துக்கு பணியாளர்களை அழைத்து வரும் கார் ஓட்டுநராக உள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அம்பிட் பார்க் சாலையில் காரை நிறுத்திவிட்டு, அதனுள்ளே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் சாகுல் அமீதுவிடம் வந்து, நண்பருக்கு விபத்து நடந்ததாகவும், உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் கூறி, உடனடியாக மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் செல்ல வருமாறு கேட்டுள்ளனர்.
இதனை நம்பிய, சாகுல் அமீது, அவர்களை ஏற்றிக்கொண்டு அம்பத்தூர் நோக்கி காரை ஓட்டிச் சென்றார். தொலைபேசி தொடர்பகம் அருகே சென்றபோது, காரை ஓரமாக நிறுத்தச் சொல்லிய அவர்கள், சாகுல் அமீதை தாக்கி, கீழே தள்ளிவிட்டு காரை கடத்திச்சென்றனர்.
காயத்துடன் தப்பிவந்த அவர், இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது, கடத்தப்பட்ட காரில் டீசல் போடுவதற்காக வைத்திருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கமும் பறிபோனதை அவர் போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து, காரை கடத்திச் சென்ற மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT