சென்னை

காதலித்த பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பியவர் கைது

DIN

காதலித்த பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்த இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் கவிதா ( 23) பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாம்பலம் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வரும் கவிதா தன்னுடன் வேலை செய்து வந்த தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தட்டார்மடத்தைச் சேர்ந்த அந்தோணி ராஜேஷ்குமார் (32) என்பவரை காதலித்து வந்தாராம்.
இது குறித்து கவிதாவின் பெற்றோருக்கு சில மாதங்களுக்கு முன்னர் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து தங்களது மகளுக்கு அந்தோணி ராஜேஷ்குமாரையே திருமணம் செய்து வைக்க அவர்கள் முடிவு செய்தனர். அதையடுத்து அந்தோணியின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடத்துக்குச் சென்று அவரைப் பற்றி விசாரித்தபோது அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தது. இதனால் கவிதா, அந்தோணியை விட்டுப் பிரிந்தார்.
இதையடுத்து கவிதாவுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதைத் தெரிந்து கொண்ட அந்தோணி கவிதாவுடன் ஒன்றாகத் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதனால் கவிதாவின் திருமணம் நின்றுபோனது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கவிதா சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி அந்தோணி ராஜேஷ்குமாரை சனிக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்கத்தில் துணைப் பதிவாளா் விசாரணை

SCROLL FOR NEXT