சென்னை

மூளைச்சாவு அடைந்தவரின் 7 உடல் உறுப்புகள் தானம்

DIN

கழிவறையில் வழுக்கி விழுந்ததில் மூளைச்சாவு அடைந்த நபரிடம் இருந்து 7 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டன.
சென்னை எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ் (51). இவர் எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ரோசலின் என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் இவர் கடந்த சனிக்கிழமை இரவு 2.30 மணியளவில் கழிவறையில் வழுக்கி விழுந்தார். இதனையடுத்து அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அன்றைய தினம் மாலையே அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பயனளிக்காமல் மூளைச்சாவு அடைந்துவிட்டதை மருத்துவர்கள் திங்கள்கிழமை அதிகாலை உறுதி செய்தனர். இதனையடுத்து அவரிடம் இருந்து உடல் உறுப்பு தானம் பெறுவது குறித்து குடும்பத்தினருக்கு ஆலோசனை அளிக்கப்பட்டது. இதையடுத்து இருதயராஜின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அவரது கண்கள், இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், தோல் ஆகிய 7 உறுப்புகள் தானம் பெறப்பட்டன. கல்லீரல், தோல் ஸ்டான்லி மருத்துவமனையிலேயே பயன்படுத்தப்பட்டது. கண்கள் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன. இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் இதயம் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தானமளிக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT