சென்னை தியாகராயநகரில் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் இடிபாடுகளில் கிடந்த பாதுகாப்புப் பெட்டகம். (வட்டமிடப்பட்டுள்ளது) 
சென்னை

சென்னை சில்க்ஸ் கட்டடம்: 2 பாதுகாப்புப் பெட்டகங்கள் மீட்பு

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இருந்து ரூ.20 கோடி மதிப்புள்ள 2 பாதுகாப்பு பெட்டகங்கள் மீட்கப்பட்டுள்ளது.

DIN

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இருந்து ரூ.20 கோடி மதிப்புள்ள 2 பாதுகாப்பு பெட்டகங்கள் மீட்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் செவ்வாய்க்கிழமை மாலை முழுவதுமாக இடிக்கப்பட்டது. கட்டட இடிபாடுகளுக்குள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் அடங்கிய பாதுகாப்பு பெட்டகங்கள் சிக்கியிருந்தன. 2-ஆவது நாளாக வியாழக்கிழமை கட்டடக் கழிவுகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது. அதில் 2 பாதுகாப்புப் பெட்டகங்கள் மீட்கப்பட்டன.
ஒரு பெட்டகம் வருவாய்த் துறையினர், போலீஸார் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதில், கருகிய நிலையில் பத்திரங்கள் இருந்தன. இதையடுத்து, மற்றொரு பெட்டகத்தில் 400 கிலோ தங்க நகைகளும், 2 ஆயிரம் கிலோ வெள்ளியும் இருப்பதாகத் தெரியவருகிறது. இதன் மதிப்பு ரூ. 20 கோடி வரை இருக்கும் எனத் தெரிகிறது. அந்தப் பெட்டகம் இன்னும் திறக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருணாச்சலம், மிசோரம் மாநில நாளை முன்னிட்டு முர்மு வாழ்த்து!

அமெரிக்கா - ஈரான் பதற்றம்! இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடக்கம்!

ஓடிடியில் வெளியானது ஹாட் ஸ்பாட் - 2!

செவ்வாய் தோஷமா? தீராத நோயா?... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

ஓடிடியில் நேரடியாக வெளியான ஜிவி பிரகாஷின் லக்கி திரைப்படம்!

SCROLL FOR NEXT