சென்னை

அஞ்சல் துறை குறை தீர்க்கும் முகாம்

DIN

அஞ்சல் சேவை சார்ந்த குறை தீர்க்கும் முகாம் செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. 
இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: 
பொது மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பதிவு அஞ்சல், பார்சல், காப்பீடு அஞ்சல், பணவிடை ஆகியவற்றை அனுப்புவதிலோ, பெறுவதிலோ குறையேதும் இருப்பின் பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அலுவலகத்தின் பெயர், அனுப்புநர், பெறுநர் முகவரி ஆகிய தகவல்களுடன் தங்கள் புகார் மனுக்களை அஞ்சலக கண்காணிப்பாளர், செங்கல்பட்டு கோட்டம், செங்கல்பட்டு 603001 என்ற முகவரிக்கு அக்.13-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். சேமிப்பு கணக்குகள் மற்றும் சேமிப்பு பத்திரங்கள் சம்மந்தப்பட்ட குறைகளையும் அனுப்பலாம்.
வாடிக்கையாளர்கள் 16-ஆம் தேதி காலை 11 மணிக்கு அலுவலகத்துக்கு நேரிலும் வந்து பங்கேற்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT