சென்னை

198 கிலோ கஞ்சாவுடன் சொகுசு கார் பறிமுதல்

DIN

அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் 198 கிலோ கஞ்சாவுடன், சொகுசு காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வீரமுத்து, தலைமைக் காவலர் முரளிகுமார் ஆகியோர் மாதவரத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே வந்த ஒரு சொகுசு காரை சோதனையிடுவதற்காக நிறுத்துமாறு போலீஸார் சைகை காட்டினர். ஆனால், கார் நிற்காமல் சென்றது.
இதைத்தொடர்ந்து, போலீஸார் அந்த காரை விரட்டிச் சென்றனர். இந்நிலையில், அம்பத்தூர் கள்ளிக்குப்பம் சோதனைச் சாவடியில் சொகுசு காரை நிறுத்திவிட்டு, அதில் வந்தவர்கள் இறங்கி தப்பியோடிவிட்டனர். 
இதையடுத்து காரில் சோதனையிட்டதில், 198 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவையும், காரையும் அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT