சென்னை

மயான கொள்ளை விழா: மகன் சமாதியில் மயங்கி விழுந்து தாய் சாவு

DIN

மயான கொள்ளை விழாவின்போது, சென்னை மயிலாப்பூர் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் தனது மகன் சமாதி மீது மயங்கி விழுந்து தாய் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மாசி அமாவாசையையொட்டி, சென்னையில் உள்ள அம்மன் கோயில்களில் வியாழக்கிழமை மயான கொள்ளை விழா நடைபெற்றது. 
சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் எல்லீஸ்புரத்தைச் சேர்ந்த ப.சாரதா (60) பங்கேற்றார். பின்னர் அவர், கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் நடைபெற்ற மயான கொள்ளைக்குச் சென்றார்.
அங்கு தனது மூத்த மகன் தினகரன் சமாதியில் அமர்ந்து வழிப்பட்டு, பூஜை செய்துள்ளார். அப்போது சாரதா திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து இறந்தார். 
இதைப் பார்த்த அவரது இளையமகன் ஹரிதாஸ் மற்றும் அங்கிருந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஐஸ் ஹவுஸ் போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT