காலரா: சென்னையில் குடிநீரை ஆய்வு செய்ய உத்தரவு
தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் காலரா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னை முழுவதும் குடிநீரை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் காலரா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னை முழுவதும் குடிநீரை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரண்டு பேருக்கு காலரா பாதித்தது. மேலும் மூன்று பேருக்கு காலரா அறிகுறிகள் கண்டறியப்பட்டன.
இதனையடுத்து மருத்துவமனையில் குடிநீர் வாரிய அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினர். தண்ணீர் மற்றும் உணவு மாதிரிகள் ஆய்வுக்கான சேகரிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை முழுவதும் விநியோகிக்கப்படும் குடிநீரை ஆய்வு செய்ய குடிநீர் வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கேன் குடிநீர், உணவுகளை ஆய்வு செய்யவும் உணவு பாதுகாப்புத் துறைக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.