மருத்துவ நிபுணர் எம்.கே.மணிக்கு கௌரவம்
தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், சிறுநீரக மருத்துவ நிபுணருமான எம்.கே.மணி,
தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், சிறுநீரக மருத்துவ நிபுணருமான எம்.கே.மணி, தொழிலதிபர் சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு, சிறுநீரகவியல் நிபுணரும், பத்ம பூஷண் விருது பெற்றவருமான டாக்டர் எம்.கே.மணி, ஆட்டோமொபைல் துறையில் புகழ் பெற்ற தொழிலதிபர் சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ஆர்.டபிள்யூ. அலெக்சாண்டர் ஜெசுதாசன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கே.எம்.மம்மீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.