டாஸ்மாக் மதுபானக் கடை சுவற்றில் துளையிட்டு ரூ.10 லட்சம் திருட்டு
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் டாஸ்மாக் மதுபானக் கடை சுவற்றில் துளையிட்டு ரூ.9.8 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் டாஸ்மாக் மதுபானக் கடை சுவற்றில் துளையிட்டு ரூ.9.8 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது.
புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பு அருணாச்சலீஸ்வரர் கோயில் தெரு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை பூட்டிச் சென்றனர்.
திங்கள்கிழமை காலையை கடையைத் திறந்தபோது கடையின் பின்பக்கச் சுவற்றில் துளைபோட்டு ரூ.9.8 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தெரிய வந்தது.
வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.