முகப்பு
சென்னை

மென்பொறியாளர் வீட்டில் திருட்டு

சென்னை மதுரவாயல் அருகே மென்பொறியாளர் வீட்டில் தங்கநகைகள், பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார்

Updated On : 9 அக்டோபர் 2018, 4:20 am IST
பகிர்:


சென்னை மதுரவாயல் அருகே மென்பொறியாளர் வீட்டில் தங்கநகைகள், பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரவாயல் அருகே உள்ள வானகரம் முதலாவது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் சு.மதுசூதனன் (32). மென்பொருள் பொறியாளரான இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மதுசூதனன், கடந்த 4-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் ராமாபுரத்தில் உள்ள மாமனார் வீட்டுக்குச் சென்றார்.
அங்கிருந்து மதுசூதனன், ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகள், ரூ.11 ஆயிரம் ரொக்கம் திருடு போனதை அறிந்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.
கோடம்பாக்கம்: கோடம்பாக்கம் சென்ட்ரல் அவென்யூவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் எஸ்.கே.ரவி (62). இவர் கடந்த 6-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை ரவி வீடு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், 4 விலையுயர்ந்த செல்லிடப்பேசிகள் ஆகியன திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.