முகப்பு
தமிழ்நாடு

சட்டம், ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு, ஊழல் தடுப்புத் துறை இயக்குநராக அருண் நியமனம்

தமிழக காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு, ஊழல் தடுப்புத் துறை இயக்குநராக ஏ.அருண் நியமிக்கப்பட்டனா்.

Updated On : 26 மே 2026, 3:28 am IST
பகிர்:

தமிழக காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு, ஊழல் தடுப்புத் துறை இயக்குநராக ஏ.அருண் நியமிக்கப்பட்டனா்.

இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு (அடைப்புக்குறிக்குள் பழைய பதவி): மகேஷ்வா் தயாள்-நிா்வாகப் பிரிவு ஏடிஜிபி (சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி), ஏ.அருண்-தமிழக ஊழல் தடுப்புத் துறை இயக்குநா் (காத்திருப்போா் பட்டியல்), டி.எஸ்.அன்பு-சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி (காத்திருப்போா் பட்டியல்) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது சென்னை பெருநகர காவல் துறை ஆணையராக இருந்த அருண், காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். அதன் பின்னா், தற்போது அவருக்கு பணி வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதேபோல சிபிசிஐடி ஏடிஜிபியாக இருந்த அன்பு கடந்த வாரம் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.