சென்னை

கஞ்சா விற்பனை: ஒரே குடியிருப்பில் 9 பேர் சிக்கினர்

DIN

சென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக ஒரே குடியிருப்பில் இருந்த 9 பேரை போலீஸார் பிடித்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை டி.பி.சத்திரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஒரு கும்பல் கஞ்சாவை பாக்கெட்டுகளில் போட்டு தயார் செய்வதாக கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் ஜெகதீசனுக்கு வெள்ளிக்கிழமை இரவு ரகசியத் தகவல் கிடைத்தது. 
அந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
சோதனையில் அந்த குடியிருப்பின் மொட்டை மாடியில் கஞ்சாவை பாக்கெட்டுகளில் போட்டுக் கொண்டிருந்த பெ.கருப்பன் (24), பெ.ஸ்டீபன் (26),மு.சரத்குமார் (21), செ.தமிழரசன் (19), ப.செந்தில்குமார் (24),ரா.கீர்த்திவாசன் (21), மோ.வினோத்குமார் (27), கோ.சரவணன் (31), நா.வினோத் (27) ஆகிய 9 பேரை போலீஸார் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். 
மேலும் அவர்களிடமிருந்த கஞ்சாவை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

SCROLL FOR NEXT