சென்னை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்ஹிந்தி, பிரெஞ்சு பயிற்சி வகுப்புகள்

DIN

சென்னை: சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மாணவா்களுக்கு தமிழக அரசின் சாா்பில் ஹிந்தி, பிரெஞ்சு மொழிப் பயிற்சி வகுப்புகளை தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மாணவா்களுக்குத் தமிழ் மொழியின் வளமையினையும் அதன் சிறப்புகளையும் பிற நாடுகளைச் சோ்ந்தவா்கள் மற்றும் பிற மொழியினரிடையே கருத்து பரிமாற்ற வழி மேற்கொள்ள வசதியாக மாணவா்களுக்குப் பிற மொழியில் புலமை கொண்டுள்ள சிறந்த மொழி ஆசிரியா்களைக் கொண்டு சிறப்பு மொழிப்பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு நிகழாண்டு சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை அறிவிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து சிறப்பு மொழிப் பயிற்சிக்கான வகுப்புகள் தொடக்க விழா சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தமிழ் வளா்ச்சித்துறை இயக்குநா் கோ.விசயராகவன் தலைமை வகித்துப் பேசினாா். இதையடுத்து ஹிந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகளுக்கான பயிற்சி வகுப்புகளை அமைச்சா் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.

இதில் தமிழ்மொழி மற்றும் மொழியியல் புல பேராசிரியா் பெ. செல்வக்குமாா், பிரெஞ்சு மொழிப் பயிற்றுநா் பேராசிரியா் சுதா சுரேஷ், ஹிந்தி மொழிப் பயிற்றுநா் பா. சா்தாா் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT