சென்னை

குடிநீர் வடிகால் வாரிய பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிப்ளமோ பொறியாளர் சங்கம்

DIN

குடிநீர் வடிகால் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்று வாரிய டிப்ளமோ பொறியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 அந்தச் சங்கத்தின் 48-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
 வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து ஆரம்ப நிலை பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும். வாரிய விதிமுறைப்படி இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதுடன், உதவி நிர்வாக பொறியாளர் பதவி உயர்வை அளிக்க வேண்டும். அதேசமயம் அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு அளித்துள்ள அரசுக்கு நன்றிகள் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 சங்கத்தின் தலைவர் வி.வி.சிதம்பரம், துணைத் தலைவர் ஆர்.சோலையப்பன், பொதுச் செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT