சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையின் (ஐசிஎஃப்) புதிய பொது மேலாளராக ராகுல் ஜெயின் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை ஐசிஎஃப்பின் பொது மேலாளராக தென்மேற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஏ.கே.சிங் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், ஐசிஎஃப் பொது மேலாளராக ராகுல் ஜெயின் அண்மையில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். ராகுல் ஜெயின் இந்திய ரயில்வேயின் இயந்திரப் பொறியியல் சேவைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஆவார்.