சென்னை

சென்னையில் 13 டன் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிப்பு

DIN


பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் இருந்து கடந்த மூன்று நாள்களில் 13 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் பைகள், கப்புகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களை செவ்வாய்க்கிழமை முதல் பயன்படுத்துதல், விற்பனை, உற்பத்திக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. 
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை, பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வீடு, கடைகளில் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரிக்கும் வகையில் 15 மண்டலங்களில் உள்ள வார்டு அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றில் மாநகராட்சி சார்பில் கடந்த திங்கள்கிழமை முதல் (டிச. 31) சேகரிப்புத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
13 டன் சேகரிப்பு: இதில், முதல் நாளான திங்கள்கிழமை 2 டன், செவ்வாய்க்கிழமை (ஜன. 1) 2.50 டன், புதன்கிழமை 8.50 டன் என மொத்தம் 13 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. 
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருப்போர் அவற்றை மாநகராட்சி வார்டு அலுவலங்களில் வழங்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT