சென்னை

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு

DIN

வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாமை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக சுகாதாரத் துறைக்கும் இதுகுறித்த மின்னஞ்சல் கிடைத்திருப்பதாகவும், விரைவில் புதிய தேதியை அறிவிப்பதாக மத்திய அரசு அதில் குறிப்பிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிப்ரவரி இரண்டு அல்லது மூன்றாம் வாரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. வட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் திட்டமிட்டபடி போலியோ முகாம்களை நடத்த இயலாத சூழல் உருவானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தொடர் நடவடிக்கைகளால் கடந்த 15 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. போலியோ சொட்டு மருந்து முகாம் நிகழாண்டில் பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில், தற்போது சில காரணங்களுக்காக போலியோ சொட்டு மருந்து வழங்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT