சென்னை

25 சதவீதம் கட்டணச் சலுகை:  பி.எஸ்.என்.எல்.  அறிவிப்பு

DIN

வாடிக்கையாளர்களுக்கு 25% கட்டணச் சலுகையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர் சேவை மையங்கள் இம் மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 24, 31) செயல்படும் என்று பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் ஜி.விஜயா வெளியிட்ட செய்திக்குறிப்பு:  வருடாந்திர கணக்கு முடிக்கும் மாதம் மார்ச் என்பதால், வாடிக்கையாளர்கள் ஓய்வின்றி வேலை பார்ப்பார்கள். அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான்  ஓய்வு கிடைக்கும் நிலையில், அவர்கள் தொலைபேசி கட்டணத்தைச் செலுத்துவதற்கு  உதவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசிக் கட்டணத்தைச்  செலுத்த வசதியாக வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 24, 31) செயல்படும். அந்த நாள்களில் தொலைபேசி கட்டணத்தைச் செலுத்தலாம். மேலும், வேண்டிய தகவல்களை கேட்டுக் கொள்ளலாம். இதுதவிர, லேண்ட்லைன், பிராட்பேண்ட் ஆகியவற்றுக்கு ஒரு ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்தினால் 25 சதவீதம்  தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகையைப் பெற மார்ச் 31-ஆம் தேதி கடைசிநாள் ஆகும். எனவே, இந்தச் சலுகையை வாடிக்கையாளர்கள் பெற்று பயன் பெறுமாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT