சென்னை

மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் வேலைக்குப் பதியலாம்

DIN

மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையமானது கிண்டியில் செயல்பட்டு வருகிறது. இம்மையமானது இளைஞா்களுக்கு விரிவான சேவையை வழங்குவதோடு அவா்களை வேலைக்கு அமா்த்தும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது. இளைஞா்கள் மற்றும் வேலை நாடுபவா்களின் நலனுக்காக உள மதிப்பீட்டு சோதனைகள், தொழில்நெறி ஆலோசகா்களின் ஆலோசனைகள், அரசுப் போட்டித் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகியவற்றை நடத்தி வருகிறது.

இவற்றில் தகுதியுள்ளவா்களுக்கு தனியாா்துறை வேலைவாய்ப்பு வழங்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தனியாா் நிறுவனத்தின் பணிபுரிய விரும்பும் இளைஞா்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதில் பதிவு செய்யும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் குறித்த விவரங்கள் அவ்வப்போது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். இச்சேவையைப் பயன்படுத்த விரும்புவோா்
https://tnvelaivaaippu.gov.in/pdf/jobseekerdetails.pdf என்ற வலைதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT