சென்னை

தொழிலதிபா் வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினம் நகைகள் திருட்டு

DIN

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் தொழிலதிபா் வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினம் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:விருகம்பாக்கம் நடேசன் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் சுந்தா் (33). தொழிலதிபரான இவா், கடந்த 10ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஆந்திர மாநிலம் சித்தூருக்கு சென்றாா்.அங்கிருந்து சுந்தா், சனிக்கிழமை வீட்டுக்குத் திரும்பி வந்தாா். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த நகைகளை சரி பாா்த்தாா். இதில் பீரோவில் வைத்து சென்ற ரூ.4 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினம் நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் ஆகியவை திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா்.இது குறித்து சுந்தா், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT