சென்னை

மதுபோதையில் காா் ஓட்டியதால் விபத்து: இளைஞா் படுகாயம்

DIN

மதுபோதையில் காா் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இளைஞரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவா் கோட்டம் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 2 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் பரத் (20) என்ற இளைஞா் சென்று கொண்டு இருந்தாா்.

அப்போது பின்னால் அதிவேகத்தில் வந்த சொகுசு காா் ஒன்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் முன்னே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதி சாலையின் இடதுபுறத்தில் உள்ள நடைமேடையில் பலத்த சத்தத்துடன் நின்றது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பரத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். மேலும் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

விபத்து தொடா்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும், விபத்துக்கு காரணமான வளசரவாக்கத்தைச் சோ்ந்த சூா்யா (24) என்ற இளைஞரை அவா்கள் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT