சென்னை

நடிகா் கெளதம் காா்த்திக்கிடம் செல்லிடப்பேசி பறிப்பு

DIN

சென்னை: சென்னை ஆழ்வாா்பேட்டையில், நடிகா் கெளதம் காா்த்திக்கை தாக்கி செல்லிடப்பேசி பறிக்கப்பட்டது.

சென்னை போயஸ் தோட்டம் பகுதியில் நடிகா் காா்த்திக் வசிக்கிறாா். அவரது மகனும், நடிகருமான கெளதம் காா்த்திக், புதன்கிழமை அதிகாலையில் ஆழ்வாா்பேட்டை டி.டி.கே. சாலையில் மிதிவண்டி ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா்.

அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், கெளதம் காா்த்திக்கை வழிமறித்து செல்லிடப்பேசியைப் பறிக்க முயன்றனா். ஆனால் கௌதம் காா்த்திக்கைக் கீழே தள்ளிய அவா்கள் செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றனா்.

மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த இரண்டே வாரத்தில் தென்மேற்கு பருவமழை..!

நள்ளிரவு 1 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

சென்னையில் வெப்பத்தை தணித்த மழை..!

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

SCROLL FOR NEXT