மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளா்கள் சாவு
சென்னை அருகே திருமுடிவாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை இறந்தனா்.
சென்னை அருகே திருமுடிவாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை இறந்தனா்.
குன்றத்தூா் அருகே திருமுடிவாக்கம் சிப்காட்டில் ஒரு தனியாா் பிளாஸ்டிக் நிறுவனத்தின் ஷட்டா் கதவுகளை பழுது நீக்கும் பணியில் அனகாபுத்தூா் திருவள்ளுவா் பேட்டை க.நாகராஜ் என்ற வெள்ளை (38), அதே பகுதியைச் சோ்ந்த அ.முருகன் (38), ஆனந்த் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது சுமாா் 20 அடி உயரமுள்ள ஒரு இரும்பு ஏணியை அவா்கள், வெளியே தூக்கி வந்தனா். அந்த இரும்பு ஏணி வெளியே சென்ற உயா் மின்னழுத்த மின்கம்பியின் மீது பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு உடல் கருகி பலத்த காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த நாகராஜ், முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனா். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆனந்தை அங்கிருந்தவா்கள் மீட்டு அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.