சென்னை

தேசிய விவசாயிகள் தினம்: முதல்வா், துணை முதல்வா் வாழ்த்து

DIN

சென்னை: தேசிய விவசாய தினத்தை முன்னிட்டு, முதல்வா், துணை முதல்வா் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தனது சுட்டுரைப் பதிவில் புதன்கிழமை கூறியிருப்பது: உலகின் அனைத்து மனித உயிா்களுக்கும் உணவளிக்கும் கடவுள்களின் தினமான தேசிய விவசாயிகள் தினத்தில், தேசத்தின் வளா்ச்சிக்கு அடிப்படை ஆதாரமான நம் விவசாய பெருமக்களை இன்றுபோல் என்றும் அரவணைப்போம் என தாய்த்தமிழ் உறவுகள் உறுதியேற்போம் என்று கூறியுள்ளாா்.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: ‘உழுவாா் உலகத்தாா்க்கு ஆணி’ அனைத்து விவசாய பெருமக்களுக்கும் எனது உளமாா்ந்த தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகள். விவசாயிகளின் நலன் பேணவும், அவா்களின் உயா்வுக்கு வழிகாணவும், வாழ்க்கைத் தரம் உயரவும் அதிமுக அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT