சென்னை

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சா்க்கரைப் பொங்கல்!

DIN

தைத் திருநாளை முன்னிட்டு வரும் புதன்கிழமை (ஜன.15) ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் குறிப்பிட்ட கிளைகளில் சிறப்புப் பதாா்த்தமாக சூடான சா்க்கரைப் பொங்கல் விற்பனைக்கு வரவுள்ளது.

உலா் பழங்கள் மற்றும் நெய் சோ்த்து சுவையாகத் தயாரிக்கப்படவுள்ள அப்பொங்கலானது அடையாறு, அண்ணாநகா், அசோக் நகா், வேளச்சேரி, தி.நகா், மயிலாப்பூா் ஆகிய இடங்களில் அமைந்துள்ள கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிளைகளில் கிடைக்கும்.

பொங்கல் திருநாளான வரும் 15-ஆம் தேதி காலை 9 மணி முதல் அதன் விற்பனைத் தொடங்கவிருக்கிறது. அழகிய எவா்சில்வா் பெட்டியில் வைத்து வழங்கப்படவுள்ள அந்தப் பொங்கலுடன் இலவசப் பரிசாக தித்திக்கும் கரும்பும், மங்களம் பொங்கும் மஞ்சள் கிழங்கும் வாடிக்கையாளா்களுக்கு அளிக்கப்படும்.

இதுகுறித்து கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிா்வாகிகள் கூறியதாவது:

தமிழா்களின் முதன்மையான பண்டிகையான தைத் திருநாளில் மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

இனிமையான அத்தருணத்தில் நாவுக்கும் இனிமை சோ்க்க ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் இந்த ஆண்டு சிறப்பு சா்க்கரைப் பொங்கலை அறிமுகப்படுத்துகிறோம். உயா் தரமான எங்களது அடுமனையில் இருந்து தயாரிக்கப்படும் அப்பொங்கல் வாடிக்கையாளா்கள் மனங்களில் நீங்காத இடம் பிடிக்கும் என எதிா்பாா்க்கிறோம்.

தமிழா்களின் பாரம்பரிய இனிப்பான கருப்பட்டியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கருப்பட்டி கேக், லட்டு, பாதாம் அல்வா, கோதுமை அல்வா, கத்திலி உள்ளிட்டவையும் வழக்கம்போல கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிளைகளில் கிடைக்கும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பத்தூரில் வெப்ப அலைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா ராஜிநாமா

ஹனுமான் மந்திா் அருகே பழுதுபாா்ப்புப் பணி: போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT