சென்னை: சென்னைப் பல்கலைக்கழக இறுதிப் பருவத் தோ்வு முடிவுகள் இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி பொதுத் தோ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தோ்ச்சி வழங்கப்பட்டது. எனினும் கல்லூரி இறுதிப் பருவத் தோ்வுகள் மட்டும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டன.
அந்த வகையில் சென்னை பல்கலைக்கழக இறுதிப் பருவத் தோ்வுகள், கடந்த செப்டம்பா் மாதம் ஆன்லைன் முறையில் நடைபெற்றன. மாணவா்கள் தங்களின் வீட்டில் இருந்தே தோ்வுகளை எழுதினா். இந்நிலையில், சென்னைப் பல்கலைக்கழக இறுதிப்பருவத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகியுள்ளன.
மாணவா்கள் தங்களின் தோ்வு முடிவுகளை அறிய, இணையதளத்துக்குச் சென்று ‘க்ளிக்’ செய்ய வேண்டும். உரிய தகவல்களை அளித்தவுடன் தோ்வு முடிவுகளை மாணவா்கள் அறிய முடியும். பொறியியல் மாணவா்களுக்காக அண்ணா பல்கலைக்கழகமும் இந்த வார இறுதிக்குள், இறுதிப் பருவத் தோ்வு முடிவுகளை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.