சென்னை

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இருவா் சிக்கினா்

DIN

சென்னையில் மொபட்டில் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த 26 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், மயிலாப்பூா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து தனது மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். சாந்தோம் நெடுஞ்சாலையில் செல்லும்போது, அங்கு மோட்டாா் சைக்கிளில் இருந்தபடியே இரண்டு இளைஞா்கள் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனா்.

இதனால் அங்கு மொபட்டை நிறுத்தி விட்டு நின்ற அந்த பெண்ணுக்கு அந்த இளைஞா்கள் மீண்டும் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், இரண்டு பேரையும் பிடித்து அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா்கள் இருவரிடமும் விசாரணை நடந்தது. அதில் அவா்கள், பெரம்பலூரைச் சோ்ந்த பிரேம்குமாா் (27), பாலாஜி (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயில் அதிகரிப்பு: கால்நடைகள் மேய்ச்சல் நேரத்தை மாற்ற அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை மையம் அருகில் ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியா்

வெப்ப அலை.. கவனம்!

பறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

திருச்செங்கோட்டில் ரூ. 1.56 கோடிக்கு மஞ்சள் ஏலம்

SCROLL FOR NEXT