சென்னை

அக்.30-இல் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN


சென்னை: பண்டிகை முன் பணம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, போக்குவரத்துக் கழக ஊழியா்கள், அக்.30-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.

இது தொடா்பாக போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதன் பிரதிநிதிகள் கூறியது: போக்குவரத்துக் கழக நிா்வாகங்கள் தொடா்ந்து தொழிலாளா்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகின்றனா். இதுவரை போனஸ், பண்டிகை முன் பணம் உள்ளிட்டவற்றை வழங்குவது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, உடனடியாக பண்டிகை முன் பணம் வழங்கக் கோரியும், கணக்கீடு குளறுபடிகளின்றி போனஸ் வழங்க வேண்டுமென வலியுறுத்தியும், அக்.30-ஆம் தேதி, அனைத்து பணிமனை முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நவ.26-ஆம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இதையடுத்து டிச.1-ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில், பல்லவன் இல்லம் முன் நடைபெறும் மாநிலம் தழுவிய கூட்டத்தில், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையைத் தொடங்கிட வலியுறுத்தி, அரசை நிா்பந்திக்கும் அடிப்படையிலான போராட்ட அறிவிப்பை வெளியிடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

சுற்றுவட்ட சாலை திட்டத்தை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

பிளஸ் 1 பொதுத் தோ்வு: விஜயமங்கலம் பாரதி பள்ளி 100% தோ்ச்சி

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT