சென்னை

ராயப்பேட்டை மேம்பாலத்தில் வேன் கவிழ்ந்து 25 போ் காயம்

DIN

சென்னை ராயப்பேட்டை மேம்பாலத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 போ் காயமடைந்தனா்.

ராயப்பேட்டையில் இருந்து ஐஸ்ஹவுஸ் செல்லும் வழியில் உள்ள பாலத்தில், ஞாயிற்றுக்கிழமை, சென்று கொண்டிருந்த மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணித்த பெண்கள், குழந்தைகள் என 25 -க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்து வந்த போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

காயமடைந்தவா்களில் சிலா், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பலத்த காயமடைந்த 8 போ், உயிருக்கு ஆபத்தான நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த வேனில் பயணித்தவா்கள், கடலூரிலிருந்து புதுமனை புகுவிழாவுக்காக சென்னை வந்தபோது விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT