சென்னை

மகள் இறந்த சோகம்: தந்தை தற்கொலை

DIN

சென்னை ஆவடி அருகே பட்டாபிராமில் மகள் இறந்த சோகத்தில், தந்தை தற்கொலை செய்து கொண்டாா்.

பட்டாபிராம் சத்திரம் பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா்கள் ரவி (52), சாந்தி தம்பதியினா். இவா்களது மகள் பவித்ரா, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து, தந்தை வீட்டில் வாழ்ந்து வந்தாா். கடந்த ஜூலை மாதம் பவித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். மனைவி இறந்த சில நாள்களிலேயே மன உளைச்சலில், பவித்ராவின் கணவன் அரவிந்தனும் தற்கொலை செய்து கொண்டாா்.

இச் சம்பவத்துக்குப் பின், ரவி மிகுந்த சோகத்துடன் காணப்பட்டுள்ளாா். இதற்கிடையே சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த ரவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது தொடா்பாக பட்டாபிராம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT