முகப்பு
சென்னை

பேக்கரிகளை இன்று முதல் திறக்க அனுமதி

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஏப்ரல் 12) பேக்கரிகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திறக்கலாம் என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 12 ஏப்ரல், 2020 at 5:27 AM
பகிர்:

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஏப்ரல் 12) பேக்கரிகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திறக்கலாம் என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

ஊரடங்கு காரணமாக உணவகங்கள் செயல்பட அனுமதி இருந்தும், சென்னையில் சில உணவகங்களே திறக்கப்பட்டுள்ளன. இதனால், அறை எடுத்து தங்கியுள்ள வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் உணவுக்காக சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும், பேக்கரிகளைத் திறக்க வேண்டும் என பரவலாக கோரிக்கை எழுந்தது. இதன் தொடா்ச்சியாக, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஏப்ரல் 12) பேக்கரிகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திறக்கலாம். பாா்சல் மட்டுமே அனுமதிப்பதுடன், தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.