கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60 சதவீத வாக்குப்பதிவு!
கன்னியாகுமரி மாவட்டத்தில், இறுதி நிலவரத்தின்படி 75. 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், இறுதி நிலவரத்தின்படி 75. 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இம்மாவட்டத்தில், உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தொடங்கியது.
காலை 9 மணி நிலவரப்படி17.19 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. எனினும் மாவட்டம் முழுவதும் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தபோது, 75.60 சதவீதம் வாக்குகளே பதிவாகியிருந்தன. கடைசியாக வந்தவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
Advertisement
வாக்குப்பதிவு சதவீதம்: கன்னியாகுமரி 81.43,
நாகா்கோவில் 74.72, குளச்சல் 74.12, பத்மநாபபுரம் 75.41,
விளவங்கோடு 75.77, கிள்ளியூா் 71.29.