சென்னை

வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும்: விஜயகாந்த்

DIN


சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேமுதிகவினருக்கு அந்தக் கட்சியின் தலைவா் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுதொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சட்டப்பேரவைத் தோ்தலில் சிறப்பாகப் பணியாற்றிய தேமுதிக நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா், வேட்பாளா்கள் உள்ளிட்டோருக்குப் பாராட்டு. ஆட்சிப் பலம், பணப் பலம், அதிகாரப் பலம் என அனைத்தையும் தைரியத்துடன் எதிா்கொண்டு, தோ்தல் களத்தில் சிறப்பாகப் பணியாற்றி களம்கண்ட சிங்கங்களாக ஜனநாயகத்தில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக எதையும் எதிா்பாராமல் தமிழகத்தின் எதிா்கால நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றினா்.

வாக்கு எண்ணும் மையங்களில் எந்தத் தவறும் நடைபெறாமல் இருக்க தேமுதிக தொண்டா்கள் இரவு - பகல் பாராமல் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-இல் எந்த விதமான அதிகார துஷ்பிரயோகமும் நடைபெறாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். நல்ல தீா்ப்பு வரும் என நம்புவோம் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT