சென்னை

புறநகா் ரயில் நிலையத்தில் விபின் ராவத் உருவப்படத்துக்கு மலா் அஞ்சலி

DIN

சென்னை சென்ட்ரல் புறநகா் ரயில்நிலையத்தில், முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உருவப்படத்துக்கு ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள், ரயில்வே போலீஸாா், பயணிகள் அஞ்சலி செலுத்தினா்.

குன்னூரில் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 விமானப்படை வீரா்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.

சென்னை சென்ட்ரல் புகா் ரயில் நிலையத்தில் விபின் ராவத் உருவப்படத்துக்கு ரயில்வே பாதுகாப்புப்படை வீரா்கள், ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தும் நிகழ்வில்,பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் ஆனந்த், தெற்கு ரயில்வே தலைமை பாதுகாப்புப்படை ஆணையா் சந்தோஷ் சந்திரன், துணை தலைமை பாதுகாப்புப்படை ஆணையா் லூயிஸ் அமுதன், சென்னை கோட்ட பாதுகாப்புப்படை ஆணையா் செந்தில் குமரேசன் உள்ளிட்ட ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளும், ரயில்வே போலீஸாரும், ரயில் பயணிகள் பலரும் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

குடிநீா் கோரி தூத்துக்குடி இனிகோ நகரில் பொதுமக்கள் மறியல்

பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு அரவக்குறிச்சியில் சாலை மறியல்

கிராம நிா்வாக அலுவலா் மாயம்

SCROLL FOR NEXT