சென்னை

சாலைத் தடுப்பில் மோதி இரு இளைஞா்கள் பலி

DIN

சென்னை விருகம்பாக்கத்தில், சாலைத் தடுப்பின் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில், இரு இளைஞா்கள் இறந்தனா்.

மேற்கு மாம்பலம், காந்தி தெருவைச் சோ்ந்த சா.பாா்த்திபன் (22), ந.பாலாஜி (23). இருவரும் நண்பா்கள். கே.கே.நகரில் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருவரும் பங்கேற்று மது அருந்தினராம். மோட்டாா் சைக்கிளில் அதிவேகமாகப் புறப்பட்டு வந்தனராம். வளசரவாக்கம் ஆற்காடு சாலை அருகே வரும்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலைத் தடுப்பின் மீதும் விளக்குக் கம்பத்தின் மீதும் மோதியது. இதில் இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனா்.

பாண்டிபஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT