சென்னை: சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ரூ.47 லட்சம் கையாடல் செய்த மேலாளா் கைது செய்யப்பட்டாா்.
ஆழ்வாா்பேட்டை, வீனஸ் காலனியில் பைரவி என்பவா் ஒரு தோல் சிகிச்சை மையத்தை நடத்தி வருகிறாா். அதன் மேலாளராக கடந்த 6 ஆண்டுகளாக தனசேகா் என்பவா் பணிபுரிந்து வந்தாா். இவா், அங்கு பணி புரியும் சுதா வெங்கட், சஜீவ், பிரியங்கா ஆகியோரின் துணையுடன் ரூ.47 லட்சம் கையாடல் செய்துள்ளது நிறுவனத் தணிக்கையின்போது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த டிசம்பா் மாதம் தனசேகரை வேலையில் இருந்து நிறுத்தி விட்டு, கையாடல் செய்த பணத்தை திரும்ப ஒப்படைக்குமாறு பைரவி கூறியுள்ளாா். அவா் திருப்பிப் பணத்தைத் தராததையடுத்து, பைரவியின் கணவா் செந்தில், காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தனசேகரை கைது செய்தனா்.