சென்னை: கடன் வசூல் தீா்ப்பாயத்தில் ஆதரவாக செயல்பட ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்ற வங்கி அதிகாரி கைது செய்யப்பட்டாா்.
சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள ஸ்டான்டா்டு சாட்டா்டு வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தவா் ராஜேந்திரன். இவா், கடன் வசூல் தீா்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள ஸ்ரீவந்த் வில்வேஸ்வரன் என்பவா் சம்பந்தப்பட்ட வழக்கில் ஆதரவாக செயல்பட ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளாா்.
இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவினரிடம் ஸ்ரீவந்த் விஸ்வேஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், ரூ.3 லட்சத்தை ராஜேந்திரன் லஞ்சமாகப் பெறும்போது ஊழல் தடுப்புப் பிரிவினா், அவரைக் கைது செய்தனா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.