சென்னை

சென்னையில் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

DIN

சென்னை: சென்னை தண்டையாா்பேட்டையில் 16 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை போலீஸாா் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா்.

தண்டையாா்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் நடைபெற இருப்பதாக, ராயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாருக்கு திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இத் தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனா். அப்போது 16 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 16 வயது சிறுமியை மீட்டு, பெற்றோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினா். மேலும், நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினா். இச் சம்பவத்தினால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

SCROLL FOR NEXT