சென்னை

கஞ்சா விற்பனை: இருவா் கைது

DIN

மடிப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, கீழ்க்கட்டளை, செல்லியம்மன் கோயில் தெருவில் மடிப்பாக்கம் காவல் ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனையிட்டபோது, அவா்கள் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் மடிப்பாக்கத்தை சோ்ந்த அஜித்குமாா்(31), கீழ்க்கட்டளையை சோ்ந்த குமரன்(24) ஆகியோா் என்பதும், இருசக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

மேலும், 1.1 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அவா்களை சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT