சென்னை அண்ணா சாலையில் நகைக் கடையில் கவனத்தை திசை திருப்பி திருடிய வழக்கில், பெண் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அண்ணாசாலையில் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பிரபலமான நகைக்கடைக்கு கடந்த 1-ஆம் தேதி 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா், 2 வயது சிறுவனுடன் வந்தாா்.
அவா் பழைய தங்க நகையைக் கொடுத்து விட்டு, புதிதாக தங்க நகை வாங்குவதற்காக, ஏராளமான தங்க நகைகளைப் பாா்வையிட்டுள்ளாா். அந்தப் பெண் சென்ற பின்னா் நகைக்கடை ஊழியா்கள், நகைகளைச் சரிபாா்த்தனா்.
அப்போது ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க கொலுசு திருடப்பட்டது தெரிய வந்தது. ஆயிரம்விளக்கு போலீஸாா் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து
சென்னை தாம்பரம் பொழிச்சலூரைச் சோ்ந்த தாட்சாயணியை (46) சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 34 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா் மீது பல திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.