புறநகர் ரயில் 
சென்னை

நாளை பராமரிப்புப் பணி: மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூா்-விழுப்புரம் பிரிவில் செங்கல்பட்டு யாா்டில் பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.31) மாற்றம் செய்யப்படவுள்ளது.

DIN

சென்னை எழும்பூா்-விழுப்புரம் பிரிவில் செங்கல்பட்டு யாா்டில் பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.31) மாற்றம் செய்யப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முழுமையாக ரத்தாகும் மின்சார ரயில்கள்: அரக்கோணம் -செங்கல்பட்டுக்கு காலை 5.35 மணிக்கு புறப்படும் ரயில், செங்கல்பட்டு -அரக்கோணத்துக்கு காலை 8.20 மணிக்கு புறப்படும் ரயில், சென்னை கடற்கரை-திருமால்பூருக்கு மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

சென்னை கடற்கரை-காஞ்சிபுரத்துக்கு காலை 5.45 மணி, மாலை 6.40 மணிக்கு புறப்படும் ரயில்கள், சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு அதிகாலை 4.55 மணி, 6.25, 7.05, 7.40, பிற்பகல் 3 மணி, 3.50 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

இந்த ரயில்களுக்கு பதிலாக, சென்னை கடற்கரை -சிங்கப்பெருமாள்கோவிலுக்கு அதிகாலை 4.55, 5.45, 6.25, 7.05, 7.40, பிற்பகல் 3 மணி, 3.50 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

செங்கல்பட்டு -சென்னை கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 7.25 மணி, 8.10, 8.50, 9.05, மாலை 5 மணி, 5.50 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கு பதிலாக, சிங்கப்பெருமாள்கோயில்-சென்னை கடற்கரைக்கு காலை 6.40 மணி, 7.35, 8.20, 9.00, 9.35, மாலை 5.10, மாலை 6 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதுதவிர சில ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT