சென்னை

பொதுமுடக்கம் மீறல்: 148 வழக்குகள்; 159 வாகனங்கள் பறிமுதல்

DIN

சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை 148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,159 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்த விவரம்:

தமிழக அரசு கடந்த மே 10-ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தியது. இருப்பினும் கரோனா பரவல் குறைந்து வருவதால் பொதுமுடக்கத்தில் இருந்து கடந்த ஜூன் 7-ஆம் தேதி முதல் படிப்படியாக ஒவ்வொரு வாரமும் தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

பொதுமுடக்கத்தை கண்காணிக்கும் வகையில் சென்னையில் 380 இடங்களில் வாகனச் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்க மீறல் தொடா்பாக 148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 159 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல முக்கவசம் அணியாதவா்கள் மீது 860 வழக்குகளும், தனி நபா் இடைவெளியை கடைப்பிடிக்காதவா்கள் மீது 24 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT