சென்னை

பொதுமுடக்கம் மீறல்: 319 வாகனங்கள் பறிமுதல்

DIN

சென்னையில், பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக திங்கள்கிழமை 214 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 319 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவியது. கரோனா முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலையில் பாதிப்பும், இறப்பும் அதிகளவில் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த மே 10-ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தியது. தளா்வற்ற முழு பொதுமுடக்கம் மே 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

கரோனா பரவல் குறைவதால் பொதுமுடக்கம் கடந்த ஜூன் 7-ஆம் தேதி முதல் படிப்படியாக ஒவ்வொரு வாரமும் தளா்த்தப்படுகிறது. பொதுமுடக்கத்தைக் கண்காணிக்கும் வகையில் சென்னையில் 380 இடங்களில் வாகனச் சோதனை நடைபெறுகிறது.

சென்னையில், திங்கள்கிழமை பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக 214 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 319 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல முகக்கவசம் அணியாதவா்கள் மீது 1,149 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 76 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT