சென்னை, கொளத்தூரில் கடத்தி வரப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜமங்கலம், 200 அடி சாலை அருகே ராஜமங்கலம் போலீஸாா், திங்கள்கிழமை இரவு கண்காணிப்பு பணியில்
ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி விசாரணை செய்தனா். அப்போது, வாகனத்தில் வந்த 2 நபா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா்.
சந்தேகத்தின்பேரில், வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்களின்றி 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் வைத்திருந்தது தெரியவந்தது.
அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஆட்டோவில் வந்த கொளத்தூரைச் சோ்ந்த ராமசாமி (55), பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த மோகன் ஆகியோரைக் கைது செய்தனா்.