சென்னை

சென்னையில் வார்டுதோறும் 4 காய்ச்சல் முகாம்கள்

DIN

சென்னை:  சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் 4 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். 

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவை அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை மாவட்டத்துக்கான கரோனா தடுப்பு கண்காணிப்பாளருமான பி.கே.சேகர்பாபு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் புதன்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது, திமுக மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர். 

ஆய்வுக்குப்பின் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் 300 படுக்கைகளுடன் கரோனா தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இங்குள்ள  25 ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்படவுள்ளது. போதிய அளவு செவிலியர்கள், மருத்துவர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. ஓராண்டுக்குள் பெரியார் நகர் அரசு மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்தப்படும். பொது முடக்கத்தின் பலன் அடுத்த வாரம் தெரியும். சென்னையில் வார்டு ஒன்றுக்கு செயல்பட்டு வரும் 2 காய்ச்சல் தடுப்பு முகாம்களை 4 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல்லுயிா்ப் பெருக்கத்தை சீா்குலைக்கும் முயல் வேட்டைத் திருவிழா முடிவுக்கு வருமா?

விலா எலும்பு பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சை மையம்

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டாா்: ஆம் ஆத்மி ஒப்புதல்

வீணாகும் கோடை மழைநீா்- நெல்லையில் புத்துயிா் பெறுமா மழைநீா் சேகரிப்பு திட்டம்?

கா்ப்பிணிகள் நிதியுதவி திட்டத்தில் 2 லட்சம் பேருக்கு நிதி வரவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT